முல்லைத்தீவு மாங்குளத்தில் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 48 வயதான கந்தசாமி கருணாகரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் பணிப்பாளர் சபை
பிரதிநிதியாக கந்தசாமி கருணாகரன் செயற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

