Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட 'மன்னா ரமேஷ்

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ‘மன்னா ரமேஷ்

டுபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனாகக்
கருதப்படும் ‘மன்னா ரமேஷ்’ என அழைக்கப்படும் ரமேஷ் பிரிஜனக இன்று
அவிசாவளை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

தற்போது மன்னா ரமேஷ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதியுடன் அவரது தடுப்புக் காலம் முடிவடையவுள்ளது.

சந்தேகநபரின் தடுப்புக் காலம் முடிவடையும் தினத்தில் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது

இலங்கை பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க சர்வதேச பொலிஸாரின் சிவப்பு எச்சரிக்கை பிடிவிராந்தின் அடிப்படையில்,  டுபாயில் இருந்து மே 7 ஆம் திகதி அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.

அவிசாவளை பிரதேசத்தை மையமாக கொண்டு வர்த்தகர்களிடம் கப்பம் பெறுதல்இ போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலை செய்ததாக மன்னா ரமேஷ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments