Thursday, June 25, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை12 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்

12 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்

எல்லை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய தமிழ்நாடு நாகை மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்களையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்குமாறு பதில் நீதவான் குமாரசுவாமி உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரிக்கப்பட்டு,  கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பபட்டது.

12 இந்திய மீனவர்களிலும் பதில் நீதவான் குமாரசாமி முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையிலேயே குறித்த மீனவர்களையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை கைது செய்யப்படாத குறித்த படகின் உரிமையாளருக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments