இலங்கையின் 10 வது நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைக் கைப்பற்றி வரலாற்று சாதனையைப் படைத்துள்ளதை முன்னிட்டு நானுஓயா கிரிமிட்டி பகுதியில் அமைதியான முறையில் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
சனிக்கிழமை மாலை நானுஓயா டெஸ்போட் கிரிமிட்டி ஆலயத்துக்கு முன்பாக
தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் பொதுமக்களுக்கு பாற்சோறும்
இனிப்புப் பண்டங்களும் வழங்கினர்.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும்
நுவரெலியா மாவட்ட அமைப்பாளருமான மூக்கையா பாஸ்கர் இணைந்துகொண்டு
தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இக்கொண்டாட்ட நிகழ்வில் அப்பகுதிகளில் வசிக்கும் ஏராளமான கட்சியின்
முக்கிய உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

