Thursday, July 2, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதிருமலையில் தேசிய மக்கள் சக்தி வேட்பு மனு தாக்கல்

திருமலையில் தேசிய மக்கள் சக்தி வேட்பு மனு தாக்கல்

திருகோணமலை மாவட்டத்தின் 13 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேசிய மக்கள் சக்தி இன்று(19) வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது.

வெளிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோரின் தலைமையின் கீழ்இ இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

திருகோணமலை மாநகர மற்றும் கிண்ணியா நகர சபை உட்பட மூதூர்,  குச்சவெளி,  கிண்ணியா,  தம்பலகாமம. திருகோணமலை பட்டணமும் சூழலும்,  கந்தளாய்.  சேருவில,  மொறவெவ,  வெருகல்.  பதவிசிறிபுர,  கோமராங்கடவெல
ஆகிய பிரதேசிய சபைளுக்குமே வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதன் போது பிரதி அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்இ

கடந்த பாராளுமன்றத் தேர்தலில்,  தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றி மகத்தானது. அதே போன்ற ஒரு வெற்றியை,  இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலிலும் பெறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

ஆட்சி நிர்வாகத்தை, வினைத்திறனாக கொண்டு செல்லும் ஒரு ஜனாதிபதி,  ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு சிறப்பான பாராளுமன்றம்,  அதேபோன்று நல்ல முற்போக்கான செயல்திறன் கொண்ட ஒரு அமைச்சரவை ஆகியன தற்போது நாட்டில் அமைய பெற்றிருக்கின்றது.

கடந்த காலங்களில்,  ஊழல்,  லஞ்சம் மோசடி போன்றவற்றுக்கு தலைமை தாங்கும், அமைப்பாக உள்ளுராட்சி சபைகள் திகழ்ந்தன.

இந்த நிலையில்,  தேசிய ரீதியில் கிராமங்களை வெற்றிகொண்டு,  ஆட்சி நிர்வாகத்தில் மக்களின் பங்குபற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு இந்த தேர்தலை நாங்கள் வாய்ப்பாக பயன்படுத்துவோம்.

மூவினங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இந்த மாவட்டத்தில்,  அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் தேசிய மக்கள் சக்தி வெற்றி கொள்வதற்கு தேவையான உத்திகளை கையாண்டிருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments