வல்வெட்டித்துறை நகரசபைக்கான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின்
வேட்பாளர் சந்திப்பு நேற்றைய தினம்(29) இடம்பெற்றது
வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியில் வல்வெட்டித்துறை நகரசபை முதன்மை
வேட்பாளர் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் ஆ.மு சிவாஜிலிங்கம் அலுவலகத்தில்
அவரது தலமையில் இடம்பெற்றது.
இத்தேர்தலில் சிறீகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோரின் தமிழ்த்தேசிய கட்சி
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் பாரளுமன்ற உறுப்பினர்
கஜேந்திர குமார் பொன்னம்பலம், முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர்
கயேந்திரன் ஆகியோர் அடங்கிய தமிழ்த்தேசிய கொள்கை அடிப்படையாகக்
கொண்ட மு.ஏ.தவராச, அருந்தவபாலன், ஐங்கரநேசனை உள்ளடக்கிய
கூட்டாகிய தமிழ்த்தேசிய பேரவையில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின்
சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றது.
இதில் சிறப்பாக தமிழ்த்தேசிய போரட்டத்தின் தாய்மண் வல்வெட்டித்துறையில்
நகரசபை முதன்மை வேட்பாளராக சிவாஜிலிங்கம் தலைமையில்
முன்னாள் பெண் போராளி, பல்கலைக்கழக மாணவன், ஓய்வுபெற்ற அதிபர்,
பட்டதாரி ஆசிரியர், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள், மற்றும் பல
சமூக மட்ட அமைப்புகளின் சமூக சேவகர்கள், இளைஞர்கள் பெண்கள்,
விளையாட்டு வீரர்கள் அடங்கிய வல்வை வாழ் தமிழ்த்தேசிய பற்றாளர்கள்
போட்டியிடுகின்றனர்.

