Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஜப்பான் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த பிரதமர் ஹரிணி

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த பிரதமர் ஹரிணி

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகாதானி, பிரதமர் கலாநிதி
ஹரிணி அமரசூரியவை அலரிமாளிகையில் இன்று (05) சந்தித்தார்.

இதன்போது நீண்டகால இருதரப்பு நட்புறவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும்
பிராந்திய பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில்
கவனம் செலுத்தப்பட்டது.

இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி
செய்வதற்கான முயற்சிகளுக்கு ஜப்பானின் ஆதரவை ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய உறவுகளில் இலங்கையின் மூலோபாய
முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.

நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம்இ குறிப்பாக ஜப்பான்
சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு
பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

வெளிப்படைத்தன்மைஇ பொருளாதார சீர்திருத்தம் மற்றும் தேசிய மாற்றத்திற்கான
அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

வர்த்தகம்இ முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட ஐந்து முக்கிய துறைகளில் இராஜதந்திர உறவுகளை மேலும் விரிவுபடுத்தவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments