Monday, June 22, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு சிறைச்சாலை கைதிகளுக்கு பார்வையாளர்களை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாளை (12) மற்றும் நாளை மறுநாள் (13) ஆகிய இரு தினங்களும்
இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்
தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு கைதிக்கும் போதுமான வகையில்இ கைதியின் உறவினர்களால் கொண்டு
வரப்படும் உணவுப் பொதிகள்,  இனிப்புகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள்
ஆகியவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று சிறைச்சாலைத் திணைக்களம்
தெரிவிக்கிறது.

இந்த பார்வையாளர்கள் சந்திப்பு நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும்
சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 சிறைக்கைதிகளுக்கு
பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக
சிறைச்சாலைகள் ஆணையாளரும்இ பேச்சாளருமான காமினி பீ திசாநாயக்க
தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அரசியலமைப்பிற்கூடாக வழங்கப்பட்டுள்ள
அதிகாரத்துக்கமைய 4 பெண் சிறைக்கைதிகளும்இ 384 ஆண் சிறைக்கைதிகளும்
விசேட பொது மன்னிப்பில் விடுவிக்கப்படவுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments