Wednesday, May 13, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளருடன் பிரதமர் சந்திப்பு

இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளருடன் பிரதமர் சந்திப்பு

இலங்கை அரசாங்கத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான தொடர்ச்சியான கூட்டாண்மையை மேம்படுத்துவதற்காக,  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,  இலங்கையில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச்  நேற்று பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

சமூகப் பாதுகாப்பு, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் நல்லிணக்கம் போன்ற முக்கிய
துறைகளில் இலங்கையின் முன்னுரிமைகளை ஆதரிப்பதற்கான ஐ.நா.வின்
தொடர்ச்சியான ஆதரவை ஃபிரான்ச் மீண்டும் வலியுறுத்தினார். 2025 ஜூன் மாதம்
நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின்
உத்தியோகபூர்வ விஜயம் குறித்தும் அவர் பிரதமரிடம் தெரிவித்தார்.

இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களின் உண்மையான தேவைகள் மற்றும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு நல்லிணக்க செயல்முறையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். காசா பகுதியில் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமை குறித்து பிரதமர் கவலை தெரிவித்ததுடன்,  பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஈடுபாடு மற்றும்
ஒருமைப்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments