Monday, June 29, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள்

வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள்

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நேற்று கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட
முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் வெலிக்கடை சிறையில் பொதுவான கைதிகள் வைக்கப்படும் பொது அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, இருவருக்கும் சிறைச்சாலை உடை அணிவிக்கப்பட்டு,  தூங்குவதற்கு பாய்
மற்றும் தலையணை வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில்,  சதொச நிறுவனம் ஊடாக
இறக்குமதி செய்யப்பட்ட 14, 000 கேரம் பலகைகள் மற்றும் 11, 000 தாம் பலகைகளை சட்டவிரோதமாக விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்து,  அரசுக்கு 53.1 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கில்,  கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பை வழங்கியது.

இதன்படி,  அந்தக் காலத்தில் சதொசவின் தலைவராக பணியாற்றிய
நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும்,
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள்
கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுவதாக மூவரடங்கிய
மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.

இதுதவிர, பிரதிவாதிகளான நளின் பெர்னாண்டோவுக்கு 4 இலட்சம் ரூபாய்
அபராதமும்இ மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதமும்
விதிக்கப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments