முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க குற்றப் புலனாய்வுத்
திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (05) காலை 9.30 மணியளவில் அவர்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த போது
மேற்கொண்ட விஜயம் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைக்கு அமைய
அவர் அங்கு முன்னிலையாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

