பிரசித்திபெற்ற நல்லூர்க் கந்தசுவாமி கோவிலில் கந்தசஷ்டி உற்சவம் காலை 9 மணிக்கு சிறப்பு பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகி தொடர்ந்து காலை 10 மணிக்கு காலைச் சாந்தி பூஜையும், 10.15 மணிக்கு வசந்த மண்டபப் பூஜையும் இடம்பெறும். மாலை 3.45 மணிக்கு சாயரட்டைப் பூஜையும், 4.15 மணிக்கு வசந்த மண்டப பூஜையும் இடம்பெற்று சுவாமி வீதிவலம் வருதல் இடம்பெறும்.
எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை சூரன்போரும் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவமும் இடம்பெறும்.

