Saturday, July 4, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபோதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க மக்கள் இயக்கம்: ஜனாதிபதி அதிரடி

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க மக்கள் இயக்கம்: ஜனாதிபதி அதிரடி

சிறைத்தண்டனை விதிக்கப்படுவோரில் 64 வீதமானோர் போதைப்பொருள்
குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
தெரிவித்தார்.

விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தின்
புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” இன்று காலை
10.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க ஒரு வலுவான மக்கள் இயக்கம்
உருவாக்கப்படும் என்றும், போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் போதைப்பொருள்
விற்பனையாளர்கள் தங்கள் சட்டவிரோத நடைமுறைகளை நிறுத்த அழைப்பு
விடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று வலியுறுத்தினார்.

போதைப்பொருள் நாட்டைச் சூழ்ந்துள்ள ஒரு மாயாஜாலப் பேரழிவு என்றும்,
அதைத் தோற்கடிக்கத் தாம் நடவடிக்கை எடுப்பதாகவும், குழந்தைகள், பொதுச் சமூகம் மற்றும் ஒரு தேசம் என்ற வகையில் முழு நாடும் இந்தப் பேரழிவின் இரையாகி வருவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

இளம் தலைமுறையினர் போதைப்பொருள் அச்சுறுத்தலின் மிகப்பெரிய
இரையாகிவிட்டனர் என்றும்இ இந்த மாயாஜாலச் சூறாவளி கிராமங்கள் மற்றும்
நகரங்களில் இப்போது பரவி வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

“ஒரு குழந்தை பிறக்கும்போது,  தாய்க்கும் தந்தைக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், தங்கள் கண் முன்னே தங்கள் குழந்தை அழிந்து போவதைப் பார்க்கிறார்கள்
. தாய் மிகுந்த வேதனைக்குள்ளாகி,  சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படுகிறார்.

நாம் 800 – 900 கிலோ போதைப்பொருளைப் பறிமுதல் செய்கிறோம். நாம் வந்த
அனைத்தையும் கைப்பற்றவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அனைத்தையும் கைப்பற்றினால், அது இங்கே வராது.

இதனால், அவர்கள் அறிந்திருக்கிறார்கள்,  கைப்பற்றப்பட்ட அளவு வந்த அளவில்
ஒரு சிறு பகுதிதான் என்று. ஆனால்,  கைது செய்யப்பட்ட அளவைப் பார்த்தால்,
விநியோகிக்கப்படும் அளவு எவ்வளவு பெரியது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

800 கிலோ போதைப்பொருள் ரூபா 1, 500 கோடிக்கு விற்கப்படுகிறது. இதனால்,
இந்த வர்த்தகத்தின் மூலம் பெரிய அளவில் பணம் குவிக்கப்பட்டுள்ளது. இது
ஒரே நேரத்தில் பெரும் கறுப்புச் சாம்ராஜ்யங்களை உருவாக்கும் கடத்தலாக
மாறியுள்ளது.

அவர்களுக்குள் இந்தச் சந்தையைப் பங்கிட்டுக் கொள்ள மோதல்கள் உருவாகியுள்ளன. அண்மைக் காலத்தில் நடந்த துப்பாக்கிச் சூடுகள் அனைத்தும் குழுக்களுக்கு இடையே நடந்த சம்பவங்கள். ஆங்காங்கே துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன. இவை அனைத்தும் போதைப்பொருளுடன் தொடர்புடையவை.

எப்படி இவ்வளவு துப்பாக்கிகள், வெடிமருந்துகள், பாதுகாப்பு வசதிகள் உருவாகின?
ஒரு நாட்டின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட அரச கட்டமைப்பு உள்ளது.

ஆனால், உண்மையில் நடந்தது என்னவென்றால், அவர்களின் நிதி பலத்தால்
அரச கட்டமைப்பு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனால்,  இனியும் இந்த நிலையை
மறைத்துக்கொண்டு எதிர்கொள்ள முடியாது.

அவர்கள் கையில் துப்பாக்கிகள் உலவுகின்றன. அவர்கள் துப்பாக்கி தயாரிப்பாளர்கள் அல்ல. உரிமம் பெற்ற ஆயுதங்களைப் பெற அதிகாரம் இருப்பது அரசுக்குத்தான்.

அரசுக்கு சொந்தமான துப்பாக்கிகள் அவர்கள் கைக்கு எப்படிச் சென்றன? சில இராணுவ முகாம்களில் இருந்து 73 t56 துப்பாக்கிகள் அவர்கள் கைக்குச் சென்றதாகத் தற்போது தகவல் வந்துள்ளது. அதில் 35 கைது செய்யப்பட்டுள்ளது.

அதேபோல்இ அதற்கான குண்டுகளையும் நாங்கள் கைப்பற்றினோம். இராணுவத்தின்
முக்கிய கேர்னல் ஒருவர் குண்டுகளை வழங்கியுள்ளார். அதற்குப் பதிலாக வங்கியில்
பணம் வந்துள்ளது. அரசுக்கு சொந்தமான துப்பாக்கியை ஒரு பொலிஸ் அதிகாரி
விற்றுவிட்டுத் தப்பிச் செல்கிறார். துப்பாக்கிகள் விற்கப்படுகின்றன. ஏன்
ஆயுதக் குழுக்களின் பணபலம் நமது அரச கட்டமைப்பை விழுங்க முடிந்தது?”

பொலிஸ்,  இராணுவம் இந்த போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கப்
பெரும் பங்காற்றினாலும்,  ஒரு சிலரின் நடவடிக்கைகள் காரணமாக
கறுப்பு அரசாங்கம் ஒன்று உருவாகி வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் சில அதிகாரிகள்
பாதாள உலகத் தலைவர்களுக்கு கடவுச்சீட்டுக்களைத் தயாரித்துக்
கொடுத்துள்ளதாகவும், இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக அரசாங்கம்
அழிந்து போயுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதிகாரபூர்வமான அரச பொறிமுறையைப் போல பலம் வாய்ந்ததாக இல்லாவிட்டாலும், அதற்கு இணையான ஒரு அரச பொறிமுறையை பாதாள உலகம் உருவாக்கியுள்ளது என்று கூறிய ஜனாதிபதிஇ கறுப்புப் பொறிமுறையை அழிக்க வேண்டும் என்றும் கூறினார்.

“இந்த நாட்டில் இரண்டு அரசாங்கங்கள் இருக்க முடியாது. மக்களின் ஜனநாயக
பலத்தால் நிறுவப்பட்ட அரசாங்கம் மட்டுமே இருக்க முடியும். கறுப்பு அரசாங்கம்
அழிக்கப்படும். இது இத்துடன் நிற்காது.

இந்தச் செயல்களில் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் தலையீடு செய்துள்ளதாகக்
கூறிய ஜனாதிபதி,  போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கத் தாம் உறுதியாகத்
தீர்மானித்துள்ளதாகவும்,  அது நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற கருத்து சமூகத்தில்
உருவாகியுள்ளது என்றும் கூறினார்.

பொலிஸின் சில அதிகாரிகள் இதில் ஈடுபட்டிருந்தாலும், தற்போதைய பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் போதைப்பொருள் ஒழிப்புக்காகக் கடும் முயற்சி
எடுப்பதாகக் கூறிய ஜனாதிபதி, பொலிஸ் வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட காலம் இதுவே என்றும் தெரிவித்தார்.

அரச கட்டமைப்பிற்குள் இந்தச் செயல்களில் ஈடுபடுபவர்கள் இருந்தால், உடனடியாக விலக வேண்டும் என்று கூறிய ஜனாதிபதி, யாரும் மறைந்து கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இளைஞர்கள் மற்றும்
பாடசாலை மாணவர்களைக் காப்பாற்ற, விளையாட்டு, இசை போன்றவற்றை
அடிப்படையாகக் கொண்ட ஒரு கலாச்சாரம் தேவை என்றும், அதற்கான திட்டம்
எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என்றும் கூறிய ஜனாதிபதி, போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மறுவாழ்வுக்கு உட்படுத்துவது
நமது பொறுப்பு என்றும் கூறினார்.

ஏற்கனவே தன்னார்வ மறுவாழ்வு மையங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான குழந்தைகளை அந்த இடங்களுக்குக் கொண்டு வந்து ஒப்படைக்குமாறு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இதற்காக வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய
ஜனாதிபதி, எதிர்காலத்தில் சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்,
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், இராணுவம், புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் பொலிஸ் ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு தேசிய செயல்பாட்டு மையம்
அமைக்கப்படும் என்றும், அதன் மூலம் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய
யாரும் வெளிநாடுகளுக்குச் செல்லவோ அல்லது மறைந்து தப்பிச் செல்லவோ
இடம் இருக்காது என்றும் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments