சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட நாவற்குழி பகுதியில் பல்வேறுபட்ட
குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு இளைஞர்கள் ஹெரோய்ன்
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு
பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களுக்கு அமைய குறித்த
கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நாவற்குழி பகுதியை சேர்ந்த 21 மற்றும் 23 வயதுடைய இரண்டு இளைஞர்களை
3700, 3500 மில்லிக்கிரம் கெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்ய முற்பட்ட வேளை பொலிஸாரை வாளினால் வெட்டமுற்பட்டதாகவும்
அதில் ஒரு சந்தேக நபர் 25 க்கு மேற்பட்ட வழக்குகளுடன் தொடர்புடையவர் என
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

