வடக்கு, கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன.
இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டுள்ளனர்.
அந்த வகையில் புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், பிரான்ஸிலும் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரின் ஏற்பாட்டில் இந்த நினைவெந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆயிரகணக்கான மக்கள் மத்தியில் சுடரேற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

