மந்திகையில் அமைந்துள்ள பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்புள்ள
வீதியால் கனரகவாகனம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச சபையில் குறித்த தடை விதிக்க வேண்டும் என பிரேரணை
ஏகமனதாக அண்மையில் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம்
மந்திகை வைத்தியசாலைக்கு முன்புள்ள வீதியில் கனரக வாகனங்கள் செல்வதற்கு
முற்றாக தடைவிதித்து பருத்தித்துறை பிரதேச சபையால் அறிவித்தல் பலகை
நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

