யாழ். வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில் நேற்றையதினம் (21) பிற்பகல்
8:30 மணியளவில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
ஆழியவளை செம்மண் வீதிக்கு அருகாமையில் உள்ள சிறிய பற்றைக் காட்டுப்
பகுதிக்குள் கைக்குண்டு ஒன்றினை புலனாய்வு துறையினர் பாதுகாப்பான
முறையில் அகற்றி மேலதிக விசாரணைகளுக்காக மருதங்கேணி பொலிசாரிடம்
ஒப்படைத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.

