Saturday, April 25, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை​ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

​ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (24) வத்தளை நீதவான் காஞ்சனா என். சில்வா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது,  முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை 25, 000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

லங்கா சதொச நிறுவனத்தின் லொறியைத் தவறாகப் பயன்படுத்தியமை
தொடர்பாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுக்கும்
விசாரணைக்கு அமைவாக,  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,  அவரது மூத்த மகன்
ஜொஹான் பெர்னாண்டோ,  இளைய மகன் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும்
சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் உள்ளிட்ட
ஐந்து சந்தேகநபர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments