Friday, May 1, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி,  காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் ‘கொமோண்டோ’ பங்களா முன்பாக இன்று (01) போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

வலி. வடக்கில் 256இ 248இ 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை
சேர்ந்த மக்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது
சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர்,  அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும்,  அப்பகுதிகளில்
இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில்,  அவை
உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.

இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி
உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத
நிலையில் காணிகளை விடுவிக்குமாறு கடந்த வெள்ளிக்கிழமை முதல் பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில்,  இன்றைய தினம் போராட்டத்தை முன்னடுத்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments