Tuesday, May 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமீன்பிடிக்கச் சென்று காணமால் போன இளைஞன் சடலமாக மீட்பு

மீன்பிடிக்கச் சென்று காணமால் போன இளைஞன் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையிலிருந்து
கடலில் படகில் மீன் பிடிக்க சென்று காணாமல்போன 19 வயது இளைஞனின்
சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

கல்முனைக்குடி கடற்பகுதியில் வைத்து தேடுதல் முன்னெடுத்துக்கொண்டிருந்த
மீனவர்களினால் மீட்கப்பட்டு களுதாவளைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மீனவர் ஒருவர் சனிக்கிழமை இரவு சென்றவர் காணாமல்
போயுள்ளதாக உறவினர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) முறைப்பாடு
செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை சிறி முருகன் கோவில்
வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய விஜயகுமார் விஜயகாந்த் சனிக்கிழமை
மாலை 6.00 மணியளவில் கடலில் மீன்பிடிப்பதற்காக சிறிய படகில் தனியாக
சென்றுள்ள நிலையில் அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆகியும்
வீடு திரும்பவில்லை.

இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு
பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவரை தேடும் பணிகளில் மீனவர்களும்
கடற்படையினரும் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது மீனவர்கள் சென்று தேடிய போது மீனவரான விஜயகாந்த் சென்ற
படகை கண்டுபிடித்த போதும் அதில் அவர் இல்லாமல் போயிருந்த நிலையில்
அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. நிலையில் இன்று
அதிகாலை கல்முனைக்குடிக்கும் கல்முனைக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில்
அவரது சடலம் மிதத்ததை கண்டு மீனவர்கள் அதனை மீட்டுவந்ததாக
உறவினர்கள் தெரிவித்தனர்.

சடலத்தினை விசாரணைகளை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments