சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றிய
சிறைச்சாலைகள் கண்காணிப்பாளர் காமினி பி. திசாநாயக்க, தனது
இராஜினாமா கடிதத்தை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரிடம்
சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பை துஷ்பிரயோகம் செய்து அனுராதபுரம்
சிறைச்சாலையில் இருந்து ஒரு கைதி விடுவிக்கப்பட்டமை தொடர்பான
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஊடகப் பேச்சாளர்
தனது இராஜினாமாவை சமர்ப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், சிறைச்சாலைகள் துறையை மறுசீரமைப்பதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படிஇ நாடு முழுவதும் சிறைச்சாலை கண்காணிப்பாளர் பதவிகளில்
பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உப்புல்தெனிய இடைநீக்கம்
செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதி அமைச்சின் மேலதிக செயலாளர்
நிஷான் தனசிங்க பதில் ஆணையர் ஜெனரலாக நியமிக்கப்பட்டமையும்
குறிப்பிடத்தக்கது.

