Friday, July 3, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகுழந்தைகள் யாசகம் பெறுவதற்கு தடை

குழந்தைகள் யாசகம் பெறுவதற்கு தடை

குழந்தைகள் யாசகம் பெறுவதைத் தடைசெய்யும் திருத்தப்பட்ட சட்டங்கள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

சூழ்நிலைகளில் முன்னர் அனுமதிக்கப்பட்ட பல வகையான குழந்தைத் தொழிலாளர்களை முழுமையாகத் தடைசெய்யும் வகையில்,  தற்போதுள்ள சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

அதன்படி குழந்தைகளை சுரண்டலில் இருந்து பாதுகாப்பதற்கான புதுப்பிக்கப்பட்ட
விதிமுறைகளை அரசாங்கம் முன்வைத்துள்ளது.

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பிச்சை எடுப்பது அல்லது வணிக நடவடிக்கைகளில்
ஈடுபடுவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.

16 முதல் 18 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினர் வீட்டு வேலை உள்ளிட்ட ஆபத்தான
தொழில்களில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளனர். அவை அவர்களை ஆபத்து அல்லது
துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கக்கூடும்.

பல்வேறு சிரமங்கள் காரணமாக,  தொழிலாளர் சுரண்டலுக்கு ஆளாகக்கூடிய
குழந்தைகள் குறித்த வளர்ந்து வரும் கவலைகளைத் தொடர்ந்து புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சில குழந்தைகள்,  குறிப்பாக பெற்றோரின் கவனிப்பு இல்லாதவர்கள்,  பொது இடங்களில் பிச்சை எடுப்பதும்,  தொடர்பில்லாத பெரியவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் பொருட்களை விற்பனை செய்வதும்,  குழந்தை கடத்தல் மற்றும் துஷ்பிரயோகம் குறித்த அச்சங்களை எழுப்புவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்திருந்தனர்.

குழந்தைத் தொழிலாளர்களின் ஆபத்துகள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப்
பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட உள்ள நிலையில்,  இந்த திருத்தச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments