எரிபொருள் விலை உயர்வு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (01)
திட்டமிடப்பட்ட பேருந்து கட்டண திருத்தம் பரிசீலிக்கப்படும் என
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
எரிபொருள் விலை சூத்திரத்தைப் பயன்படுத்திய பிறகும், இந்த நேரத்தில் பேருந்து
கட்டணங்களை திருத்த வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.
முன்மொழியப்பட்ட கட்டண சரிசெய்தல் நேற்று மாலை மதிப்பாய்வு
செய்யப்பட்டதாகவும், ஆனால் கணக்கீட்டு முடிவுகள் தற்போதைய சூத்திரத்தின் கீழ்
அதிகரிப்பு தேவையற்றது என்பதைக் காட்டியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எரிபொருள் விலைகள் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும்இ நியாயமான மற்றும்
மலிவு விலையில் பொதுப் போக்குவரத்து கட்டணங்களைப் பராமரிப்பதில்
அரசாங்கம் உறுதியாக இருப்பதாக அமைச்சர் பயணிகளுக்கு உறுதியளித்தார்.

