Thursday, June 25, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசெம்மணி படுகொலைக்கு எதிராக கொழும்பில் திரண்ட மக்கள்

செம்மணி படுகொலைக்கு எதிராக கொழும்பில் திரண்ட மக்கள்

செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு
முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

‘படுகொலைக்கு எதிராக எழுச்சி கொள்வோம்’ எனும் தொனிப் பொருளில் நீதிக்கான
மக்கள் சக்தி அமைப்பினரால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போராட்டத்தில் கலந்துகொண்டோர், ‘புத்த தேசமா? புதைகுழிகள் தேசமா?, செம்மணயில் எலும்புகளாக எம்மவர்கள்,  சர்வதேசமே தமிழர்களை ஏமாற்றாதே..!, யுத்த குற்றத்தின் சாட்சி செம்மணி, வட கிழக்கில் நில ஆக்கிரமிப்பை நிறுத்து’ போன்ற பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன்,  சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும்,  அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான
தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல்,  சிவில் சங்க
உறுப்பினர்கள்இ ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும்
பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இதன்போது போராட்டகாரர்கள்,  பேரணியாக முன்னோக்கி நகர்த்த முற்பட்ட வேளை,  பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. போராட்டக்களத்தில் கலக்கமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments