Saturday, August 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்

சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின்
ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான
உண்ணாவிரதப் போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று (25) ஆரம்பமானது.

குறித்த போராட்டம் யாழ். செம்மணியில் இன்று காலை ஆரம்பமாகிய நிலையில்
எதிர்வரும் 29 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும்,  உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும்,  சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில்,  வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,  செயற்பாட்டாளர்கள் மற்றும்
பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

சிறிலங்காவில் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம்,  தமிழ் இனவழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல்,  போர் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments