பரந்தன் பூநகரி வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து இன்று (22) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீதி ஊடாக கிளிநொச்சி நோக்கி பயணித்த வேன் கட்டுப்பாட்டை இழந்து
குடமுருட்டி பாலத்தில் மோதி குடைசாய்ந்துள்ளது.
விபத்திற்குள்ளான குறித்த வாகனத்தில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில்
கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.

