முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான
சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை
புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
300 இலட்சம் ரூபா பணத்தைச் சட்டவிரோதமான முறையில் பரிமாற்றம்
செய்தமை மற்றும் சொத்துக்களைக் குவித்தமை தொடர்பான குற்றச்சாட்டின்
கீழேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

