பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் புதியதாக முன்வைக்கப்படும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் ஆகியவற்றின் அடக்குமுறை அம்சங்களுக்கு எதிராக இன்று மட்டக்களப்பில் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநகர உள்ளூராட்சி உறுப்பினர்கள் கட்சி அங்கத்தவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த கண்டனப் போராட்டமானது மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் இருந்து
ஆரம்பிக்கப்பட்டு காந்திப் பூங்கா வரை எதிர்ப்புப் போராட்டமானது
சென்றடைந்தது.

