நாட்டில் இதுவரை டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
32ஆக அதிகரித்துள்ளதுடன் இவ்வருடத்தில் இதுவரை 55, 406 டெங்கு நோயாளர்கள்
பதிவாகியுள்ளதென தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 1, 024 புதிய தொற்றுகள் உறுதி
செய்யப்பட்டுள்ளன.
ஜூன் மாதத்தில் மட்டும் 21, 565 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்இ கொழும்பு
மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிகளவிலான நோயாளர்கள்
பதிவாகியுள்ளனர்.
நுளம்புகள் பெருகும் இடங்களை உடனடியாக அகற்றி, பொதுமக்கள் விழிப்புடன்
செயல்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

