மத்திய அதிவேக வீதியின் கட்டுமானப் பணிகளை கலகெதர பகுதியில் நிறைவு செய்வதுஇ எதிர்காலத்தில் அந்த அதிவேக வீதியை கன்னொருவை வரை
நீடிக்கும் திட்டத்துடன்தான் என்று போக்குவரத்துஇ நெடுஞ்சாலைகள் மற்றும்
ஊடக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (09) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன
எழுப்பிய பல கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர்,
கண்டி நகரில் மேலும் பல வீதி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள
திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், சேதமடைந்த கொழும்பு – கண்டி மலையக பிரதான ரயில் பாதையின்
கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது 2027 ஆம் ஆண்டின்
முதல் இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சர்
மேலும் தெரிவித்தார்.

