Monday, July 13, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஉயிரிழந்த அதிகாரிகளுக்கு 20 இலட்சம் வரை நஸ்டஈடு

உயிரிழந்த அதிகாரிகளுக்கு 20 இலட்சம் வரை நஸ்டஈடு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை
அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் என்பது
ஆரம்பக் கட்டக் கொடுப்பனவு மட்டுமே என சிறைச்சாலைகள் திணைக்களம்
தெரிவித்துள்ளது.

வழங்கப்பட்ட இந்தத் தொகை குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப்
பதிலளிக்கும் வகையில்,  சிறைச்சாலைகள் திணைக்களத்தின்
ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரவித்துள்ள அவர்,

‘ உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய்க்கும்
அதிகமான தொகையை வழங்குவதற்கு திணைக்களம் கவனம்
செலுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். அத்துடன்இ உயிரிழந்தவர்களின் அனைத்து
இறுதிக்கிரியைகளும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் செலவிலேயே
மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில்,  இந்த மோதலில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு
நட்டஈடு வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மோதலில் காயமடைந்த 7 அதிகாரிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று வருவதாகவும்இ அவர்களில் மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments