Friday, July 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசெம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் 420மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
காணப்பட்டுள்ளன.

இலங்கையில் மிக பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி மாறியுள்ள நிலையில் 420 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம்
காணப்பட்டுள்ளன

செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் 34 வது நாளான இன்று (16) 6 மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 7 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதில் 1 கைக்குழந்தை உட்பட 3 சிறுவர்களின் எலும்பு கூடுகளும், 3 பெரிய மனிதனின் எலும்புக்கூடுகளும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இன்று 1 பாசிமணி சான்றுப் பொருளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதுவரை மொத்தமாக 130 பிற சான்றுப் பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின் குமார் முன்னிலையில்
நடைபெற்ற அகழ்வு பணிகளில் இதுவரையில் 420 மனித என்புத் தொகுதிகள்
அடையாளம் காணப்பட்டுள்ளதில் அவற்றுள் 416 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு
நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments