Thursday, July 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகோட்டாபயவின் ரிட் மனு மேலதிக பரிசீலனைக்காக ஒத்திவைப்பு

கோட்டாபயவின் ரிட் மனு மேலதிக பரிசீலனைக்காக ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும்
விசாரணைகளுக்கு அமைவாக,  தன்னை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்
கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்ட
ரிட் மனுஇ மேலதிக பரிசீலனைக்காக ஓகஸ்ட் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு
மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று அழைக்கப்பட்டபோது, மனுதாரர் கோட்டாபய ராஜபக்ச சார்பில்
ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா பதிலுரைகளைச்
சமர்ப்பித்தார்.

மேலதிக சமர்ப்பணங்களை ஓகஸ்ட் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்க
நீதிமன்றம் உத்தரவிட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments