உயர்த்த முடிந்துள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொவிட் தொற்று – பொருளாதார நெருக்கடியினால் சரிவடைந்த சொத்துக்களின் பெறுமதி ‘உறுமய’ திட்டத்தின் ஊடாக வலுவடைந்திருப்பதால், அதனூடாக நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
‘உறுமய’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ்இ மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு மன்னார் நகர சபை மண்டபத்தில் இன்று நடைபெற்றபோதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்துக்கு 5 ஆயிரம் காணி உறுதிகள் வழங்கப்படவுள்ள நிலையில், அவற்றில் 442 உறுதிகள் ஜனாதிபதியால் வழங்கப்பட்டன.

