பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க
நாளை பதவியேற்க உள்ளார்.
பதில் சட்டமா அதிபராக பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த 26ஆம் திகதி சட்டமா அதிபராக கடமையாற்றிய சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து சட்டமா அதிபர் பதவி வெற்றிடமாகியுள்ளது.
இதன்படிஇ பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்கவை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அவரை சட்டமா அதிபர் பதவிக்கு நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரை எதிர்வரும் காலங்களில் அரசியலமைப்பு சபைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
பாரிந்த ரணசிங்க, முன்னாள் பிரதம நீதியரசர் கே. ஏ.பாரிந்த ரணசிங்கவின் மகனாவார்.

