Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை10 கிலோ கஞ்சாவை மீன் லொறியில் கடத்திய இருவர் கைது

10 கிலோ கஞ்சாவை மீன் லொறியில் கடத்திய இருவர் கைது

முல்லைத்தீவு மற்றும் மன்னார் பகுதிகளிலிருந்து மீன்களை ஏற்றிச் செல்வதாகக் கூறி
அதி குளிரூட்டப்பட்ட லொறியில் சுமார் 32 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற இருவர் கொழும்பு மோதர ராஜமால் வத்தை மகப்பேறு வைத்தியசாலைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாக கொழும்பு வடக்குப் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் மீன் வியாபாரி எனவும் மற்றையவர் லொறி சாரதி எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் இருவருடன் 10 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாஇ கஞ்சா கடத்த பயன்படுத்திய குளிரூட்டப்பட்ட லொறி, கையடக்கத் தொலைபேசிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மற்றும் மன்னாரில் இருந்து கொண்டு செல்லப்பட்ட மீன்களை சந்தேகநபர்கள் பேலியகொடையில் இறக்கியதன் பின்னர்,  மோதர பகுதிக்கு கொண்டு வரப்பட்ட கஞ்சா போதைப்பொருள் இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments