மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகேயை ஆதரித்து வவுனியா நகரில் துண்டு பிரசுரம் விநியோகிக்கும் செயற்பாடு இன்று
முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா இலுப்பையடி பகுதியில் ஆரம்பமான குறித்த பிரச்சார நடவடிக்கை வவுனியா நகரப்பகுதி எங்கும் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பிரச்சார நடவடிக்கையில் மக்கள் போராட்ட அமைப்பினர் மற்றும்
புதிய ஜனநாயக மார்க்சிஸ லெனினிச கட்சியினர், பொதுமக்கள் என கலந்து
கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

