Thursday, June 25, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமுன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பது மக்களின் வேலையில்லை- அனுர அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பது மக்களின் வேலையில்லை- அனுர அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகள்இ சலுகைகள் நிச்சயமாக இரத்து செய்யப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

பத்தேகமவில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை
தெரிவித்துள்ளார்

முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பதும் கவனித்துக்கொள்வதும் மக்களின் வேலையில்லை. சுற்றுநிரூபங்கள்,  நாடாளுமன்ற சட்டங்கள், அரசமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிகளுக்கு விசேட சலுகைகள் சிறப்புரிமைகள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த சுற்றுநிரூபங்களில் சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவருவது குறித்து கவனம் செலுத்துகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments