Monday, June 22, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவவுனியாவில் தவறான இளம் குடும்ப பெண் எடுத்த விபரீத முடிவு

வவுனியாவில் தவறான இளம் குடும்ப பெண் எடுத்த விபரீத முடிவு

குடும்ப பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் வவுனியா,  செட்டிகுளம் பகுதியில் நேற்றையதினம்(29) இரவு 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பெரியகுளம் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்ப பெண் ஒருவர் இரவு வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரிந்த நிலையில் அயலவர்களால் மீட்கப்பட்டு செட்டிகுளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அவர் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும்,  அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்தில் செட்டிகுளம்இ பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளம் குடும்ப பெண்ணே உயிரிழந்தவராவார்.

அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments