Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம்: சந்தேகநபர் கைது

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம்: சந்தேகநபர் கைது

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்,  இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டதோடு,  அவரைத் தேடுவதற்காக 5 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர் இன்று (12) காலை கல்னேவ பகுதியில் கைது
செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து
நாடளாவிய ரீதியில் இன்று 24 மணிநேர பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. .

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments