கொழும்பு,பம்பலப்பிட்டி பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை பலத்த காற்று
வீசியதில் வீதிக்கருகில் பொருத்தப்பட்டிருந்த இலத்திரனியல் விளம்பரப் பலகை
சரிந்து வீழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எவரும் பாதிக்கப்படவில்லை. அருகிலிருந்த
சில கடைகளின் மேற்கூரைகள் மாத்திரம் சேதமடைந்துள்ளன.
இலத்திரனியல் விளம்பரப் பலகை சரிந்து வீழும் காணொளி காட்சி சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
இதேவேளை, பலத்த காற்றினால் நாடளாவிய ரீதியில் மின்சார தடையும்
ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

