வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகி உள்ளதாக
வளிமண்டலவியல் திணைக்களமும்இ இந்திய வானிலை ஆய்வு மையமும் உறுதிப்படுத்தியுள்ளன.
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் நேற்றிரவு தாழமுக்க நிலையொன்று உருவாகியுள்ளது. இது எதிர்வரும் நாட்களில் வடகிழக்குக் திசையில் நகர்ந்துஇ படிப்படியாக வலுவடைந்து நாளையதினம் தாழமுக்கமாக மாறும் சாத்தியம் உள்ளதாகவும் எதிர்வு கூரப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த தாழமுக்கம் காரணமாக அது சூறாவளியாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சூறாவளிக்கு oman நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்டremal எனும் பெயர் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இது எதிர்வரும் 25ஆம் திகதியளவில் வடக்கு ஒரிசா அல்லது மேற்கு வங்கம் பகுதியினூடாக ஊடறுத்துச் செல்லலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

