நயினாதீவு குறிகட்டுவான் படகு சேவை இன்று சனிக்கிழமை தொடக்கம் புதிய நேர
அட்டவணையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்புடனான நேர அட்டவணையை வேலணை பிரதேச சபை நயினாதீவு
உப அலுவலகத்தின் பொறுப்பதிகாரி வெளியிட்டுள்ளார்.
நயினாதீவு – குறிகட்டுவான் இடையேயான படகுச் சேவை காலை 6.30 முதல் மாலை 5.30 மணிவரை ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் ஒரு படகு புறப்படும்.
மற்றும் குறிகட்டுவான் – நயினாதீவு இடையேயான படகுச் சேவை காலை 7 மணி முதல் மாலை 6.30 மணிவரை ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் ஒரு படகு புறப்படும் என கூறப்பட்டுள்ளது.
நயினாதீவு நாகபூஷணி அம்பாளின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 07ம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

