Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை28 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

28 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

நீர்கொழும்பு பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற
இரகசிய தகவலுக்கு அமைவாக இன்று நள்ளிரவு 1.30 மணியளவில்
வவுனியா நகரில் வைத்து குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

வவுனியா பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து மன்னார் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி கொண்டு செல்லப்பட்ட கூலர்ரக வாகனம் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது,  28 கிலோ 750 கிராம் கேரளா கஞ்சாவை வவுனியா பொலிஸார் பறிமுதல் செய்ததுடன்,  மன்னார் பேசாலை பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 27 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் இன்று வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments