பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இன்னமும் இருப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று (24) பாராளுமன்றத்தில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அமைச்சர்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே
அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை. அதனால்தான் அரசு தலையிட்டு இந்த விஷயத்தில்
தொடர்ந்து வேலை செய்கிறது. முதலாளி நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளதாலும்இ
வழக்கு நிலுவையில் உள்ளதாலும் இது தொடர்பாக என்னால் அறிக்கை அளிக்க முடியாது. அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. நாமும் அதே நிலையில்தான் இருக்கிறோம். என்றார்

