Sunday, May 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசெஞ்சோலை படுகொலையின் 18 ம் ஆண்டு நினைவேந்தல்

செஞ்சோலை படுகொலையின் 18 ம் ஆண்டு நினைவேந்தல்

முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் செஞ்சோலை வாளாகத்தில் கடந்த 2006. 08. 14 அன்று விமானத்தாக்குதலில் கொல்லப்பட்ட 54 மாணவச் செல்வங்களின் 18ம் ஆண்டு நினைவுநாள் இன்று நினைவு கூரப்பட்டுள்ளது

செஞ்சோலைவளாகத்தின் நினைவு வளைவு அமைந்துள்ள முன்வீதியில். தாய்த்தமிழ் பேரவையினரின் ஏற்ப்பாட்டில் காலை 9:00 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பமாகியதுஇ இந்நிகழ்வில் பொது ஈகை சுடரினை செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட 2 பிள்ளைகளின் தந்தை ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட பெற்றோர் பிள்ளைகளின் திருவுருவப்படங்களுக்கு சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் அரசியல்வாதிகள்இ சமூக செயற்பாட்டாளர்கள். தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments