சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கே.கே.எஸ் வீதியால் சுன்னாகத்தில் இருந்து
மருதனார்மடம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று தடம்புரண்ட நிலையில்
2 வயதுடைய ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
குறித்த முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தி தாயும், 2 வயது மகனும் பயணத்தை மேற்கொண்டனர். இதன்போது கிளை வீதி ஒன்றுக்கு திருப்ப முற்பட்டபோது முச்சக்கர வண்டி தடம்புரண்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த தாயும்இ மகனும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.

