Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகிளிநொச்சி விபத்து: ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி விபத்து: ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்

குறித்த விபத்த இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் கனகாம்பிகைக் குளம் பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தை ஒருவரே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.

155 ம் கட்டை சந்தியில் குறுந்தூர பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பேருந்தை முந்தி பயணித்துள்ளது. இந்நிலையில் அதே திசையில் பயணித்த பார ஊர்தி குறித்த மோட்டார் சைக்கிளை மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பாரஊர்தியின் சாரதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில் விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments