தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து
11 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியாச்சகர் என்.பிரபாகரன் தெரிவித்தார்
சிறு குற்றம் பிரிந்தோர்இ தண்டப்பணம் செலுத்த முடியாதவர்கள் இவ்வாறு பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சிறைச்சாலை அத்தியாச்சகர் என். பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை நிகழ்வில் சிறைச்சாலை நலன்புரிச்சங்க அதிகாரிகள்இ சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சிறைச்சாலை அதிகாரிகளை வணங்கிய பின் நன்றி தெரிவித்து கைதிகள் சிறைச்சாலையில் இருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

