தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் 359 சிறைக் கைதிகள் ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேர் வேறு குற்றங்களுக்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறிய குற்றங்கள் மற்றும் சிறிய அபாராத தொகையைச் செலுத்த தவறிய சிறைக்கைதிகளே இவ்வாறு பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.

